search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடியுடன் கனமழை"

    புதுவையில் நேற்று இரவு 9 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு மாதம் முடியும் தருவாயிலும் காற்று வீசவில்லை.

    அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலின் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தென் தமிழகம் வழியாக வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு புதுவையில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

    மேலும் நகரின் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் சாலையோர சிற்றுண்டி மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    ×