என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இடியுடன் கனமழை"
புதுச்சேரி:
புதுவையில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடும் கோடை வெயில் இருக்கும். ஜூலை மாதத்தில் வெயில் குறைந்து காற்று வீசத் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை முடிந்து ஆகஸ்டு மாதம் முடியும் தருவாயிலும் காற்று வீசவில்லை.
அதே நேரத்தில் கோடையை விட அதிக வெப்பமான வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. மதியம் 12 மணிக்கு மேல் வீசும் வெயிலின் கடும் வெப்பத்தால் மக்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தென் தமிழகம் வழியாக வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு புதுவையில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
மேலும் நகரின் ஒரு சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் சாலையோர சிற்றுண்டி மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்